OLX Reselling மூலம் 100 கோடி கொள்ளை அடித்த கிராமம் கைது செய்ய முடியாமல் திணறிய போலீஸ்

OLX Reselling app மூலம் 100 கோடி கொள்ளை அடித்து சொகுசாக வாழும் கிராமம்:




OLX மூலம் பொருள் வாங்குபவர்களுக்கு இந்த தகவல் அதிர்ச்சியை உண்டாக்கலாம். ஆம் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள துநாவல் எனும் கிராமத்தில் தான் இந்த மோசடி நிகழ்ந்து உள்ளது.

ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த நரேஷ் பால் சிங் மற்றும் பேச்சு சிங் எனும் இருவர் OLX மூலம் பழைய பொருட்களை விற்று வந்து உள்ளனர்.

இவர்கள் தங்கள் உபயோகித்த பழய வாகனங்கள் மற்றும் உபகரண பொருட்களை விற்பனைக்கு உள்ளதாக OLX மூலம் விளமபரங்களை கொடுத்து அந்த விளம்பரம் மூலம் இவர்களை தொடர்பு கொண்டவர்களிடம் தங்கள் ஒரு இராணுவ வீரர் என்றும் பணியிடை மாற்றம் காரணமாக வெரு இடம் செல்வதால் இதனை விற்பதாக குறி அவர் இராணுவ உடையில் உள்ள புகை படஙகளை இணையத்தில் பகிர்ந்து அவர்களது நம்பிக்கையை பெற்றுள்ளார்.

பின்னர் பொருளுக்கான பணத்தை online transaction மூலம் பெற்று கொண்டு பொருட்களை அனுப்பாமல்  மோசடி செய்து உள்ளனர். இது சம்பந்தமாக பல மாநிலங்களில் இவகள் மீது compleint பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதனை அடுத்து தமிழகத்தில் பதிவான complaint மூலம் ராஜஸ்தான் சென்ற போலீசார் அவர்களை கைது செய்ய முற்படும்போது.

அந்த முழு கிராமம் அவர்களுக்கு ஆதரவாக நின்று கைது செய்ய விடாமல் தடுதது உள்ளது. இதனை அடுத்து விசாரணை செய்தபோது இவர்கள் மோசடி செய்த பணத்தை வைத்து அந்த கிராமம் முழுவதும் சொகுசாக வாழ்ந்தது தெரிய வந்துள்ளது.

இறுதியாக ராஜஸ்தான் காவலர்கள் உதவியோடு இருவரையும் கைது செய்துள்ளனர் மேலும் அந்த கிராமத்தில் உள்ள பலர் மீதும் நடவடிககை எடுக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த தகவல் OLX உபயோக படுத்தும் பலர் மத்தியில் பீதியை கிளப்பி உள்ளது. Online மூலம் பொருள் வாங்குபவர்கள் அதன் நம்பக தன்மையை அறிந்து வாங்குமரு காவல்துறை அறிவுறுத்தி உள்ளனர்.

Post a Comment

0 Comments