ஏப்ரல் 20 ஆம் தேதிக்குப் பிறகு எது தொடரலாம்? எது தொடரக்கூடாது? என்ற விவரம் தமிழக அரசு அறிவித்துள்ளது.

ஏப்ரல் 20ஆம் தேதிக்கு பிறகு எவையெல்லாம் இயங்கும்??



இந்தியாவில் Corona Virus பாதிப்பு அதிகமாகி வந்த  நிலையில் virus தோற்று பரவலை தடுக்கும் வகையில் மத்திய அரசு ஏப்ரல் 14ஆம் தேதி வரை 144 தடை ஊரடங்கு உத்தரவை அறிவித்திருந்தது. ஆனால் தற்போது மேலும் virus இன் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், அந்த ஊரடங்கு உத்தரவை மேலும் 2 வாரங்களுக்கு நீட்டித்து, மே மூன்றாம் தேதி வரை இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு கடைபிடிக்கப்படும் என பிரதமர் மோடி அறிவிப்பு வெளியிட்டிருந்தார்.

அதைத்தொடர்ந்து மேலும் வரும் ஏப்ரல் 20 ஆம் தேதி வரை மிகக் கடுமையாக ஊரடங்கு கடைபிடிக்க வேண்டும் எனவும்,  20 ஆம் தேதிக்கு பிறகு சில கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு தொடரும் எனவும் அறிவித்திருந்தார்.

தற்போது 20 ஆம் தேதிக்குப் பிறகு என்ன கட்டுப்பாடுகள் செயலில் இருக்கும், எவையெல்லாம் இயங்கும்? எதையெல்லாம் இயங்காது? என்பதைப்பற்றி விரிவான விவரம் தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ளது.

அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள விவரங்கள்:

  1. விவசாயம், தோட்டக்கலை, பண்ணை தொழில், விலைப் பொருள் கொள்மதிகளுக்கு அனுமதி.
  2. மாநில மாவட்டங்களுக்கு இடையேயான போக்குவரத்து தடை மேலும் தொடரும்.
  3. பிளம்பர், தச்சு வேலை, எலக்ட்ரீசியன், மோட்டார் மெக்கானிக் தொழில் செய்பவர்களுக்கு அனுமதி.
  4. 100 நாள் வேலை இத்திட்டத்தின்கீழ் பணிகளை தொடரலாம்.
  5. விவசாயம் சார்ந்த இயந்திர நிறுவனங்கள், பழுது நிறுவனங்கள் இயங்கலாம்.
  6. நகரங்களுக்கு வெளியில் அமைந்துள்ள தொழிற்சாலைகள் இயங்க அனுமதி.
  7. வழிபாட்டுத் தலங்கள், திரையரங்குகள், வணிக வளாகங்கள், அரசியல் நிகழ்வுகலுக்கு  தடை.
  8. சிறப்பு பொருளாதார மண்டலங்களில் உள்ள ஆலைகள், ஏற்றுமதி தொடர்பான நிறுவனங்கள் இயங்கலாம்.
  9. நாடு முழுவதும் முக கவசம் அணிவது கட்டாயம்.
  10. மளிகை கடைகள், காய்கறி கடைகள், பழக் கடைகள், பால் நிலையங்கள், இறைச்சி கடைகள் இயங்கலாம்.
  11. Corona பாதிப்பு அதிகம் உள்ள இடங்கள், பாதிக்கப்பட்டவர்கள் வாழும் பகுதிகளுக்கு இந்த கட்டுப்பாடு பொருந்தாது.
இத்தகைய கட்டுப்பாடுகள் தகர்வுகளுடன் ஏப்ரல் 20ஆம் தேதிக்கு பிறகு ஊரடங்கு தொடரும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

Post a Comment

0 Comments