Ponniyin Selvan Tamil Story | பாகம் 1 | அத்தியாயம் 5 - குரவைக்க்கூத்து | Master Mind

பொன்னியின் செல்வன்

பாகம் 1- புதுவெள்ளம்


வணக்கம் நண்பர்களே நமது முந்தைய பதிவான பொன்னியின் செல்வன் பாகம் 1 அத்தியாயம்-4  கடம்பூர் மாளிகை படிக்க விரும்பினால் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணையத்தில் சென்று படிக்கவும்:

பொன்னியின் செல்வன் தொடர்கதையை முதல் பாகத்தில் இருந்து படிக்க விரும்பினால் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணையத்தில் சென்று படிக்கவும்:
https://mastermindtamil.blogspot.com/2020/04/ponniyin-selvan-tamil-story.html?m=1

அத்தியாயம் 5- குரவைக்கூத்து


அந்தப்புரத்தில் இருந்து நண்பர்கள் இருவரும் வெளியே வந்தனர். அப்பொழுது உள்ளே இருந்து "கந்தமாறா! சற்று இங்கே வா" என ஒரு குரல் கேட்டது. "அம்மா என்னை அழைக்கிறார்கள் நீ இங்கேயே சற்று இரு நண்பா நான் சென்று வருகிறேன்" என்று கூறிவிட்டு கந்தமாறன் அந்தப்புரம் உள்ளே சென்றான். அவன் உள்ளே சென்றதும் சில பெண்கள் சிரிப்பதும், கந்தமாறன் தயங்கி தயங்கி ஏதோ பதில் கூறுவதும் மெல்லியதாக வந்தியத்தேவனின் காதில் விழுந்தது. இதைக்கேட்ட அவனுக்கு தன்னைப்பற்றிதான் ஏதோ கேலியாக  பேசுகிறார்களா! என்று எண்ணினான்.

சற்று நேரம் கழித்து கந்தமாறன் வெளியே வந்தான். "வா நண்பா உனக்கு இந்த மாளிகை முழுவதும் சுற்றி காட்டுகிறேன் என்று அழைத்து சென்றான்". சென்றுகொண்டிருக்கும் பொழுது வந்தியத்தேவன் "நண்பா நீ என்னை வெளியில் நிற்க சொல்லிவிட்டு உள்ளே சென்றதும் உள்ளே பலரின் சிரிப்பு சத்தம் கேட்டதே, உன் நண்பன் என்னை பார்த்ததில் அவர்கள் அனைவருக்கும் மகிழ்ச்சியா" என்று கேட்டான்.

"ஆமாம் அன்னை மற்றும் அனைவருக்கும் உன்னை பார்த்ததில் மகிழ்ச்சிதான்"

"ஆனால் அவர்கள் பேசி சிரித்தது உன்னை பற்றி அல்ல".

"என்னை பற்றி இல்லையா! பின் வேரு யாரைப்பற்றி உள்ளே விவாதம் நடக்கிறது" என்று ஆவலுடன் வந்தியத்தேவன் கேட்டான்.

"மாமா, பழவேட்டையார் அவர்கள் புதிதாக ஒரு இளம் பெண்ணை திருமணம் செய்துள்ளாரம். எங்கு சென்றாலும் அப்பெண்ணை தன்னுடன் பல்லக்கில் ஏற்றிக்கொண்டு கூடவே அழைத்து செல்கிறாராம்.

"ஓ! அந்த மர்ம சுந்தரியை மனந்துக்கொண்டு எவ்வளவு ஆண்டுகள் ஆகிறது".

"2 ஆண்டுகளுக்கும் கம்மியாக தான் இருக்கும்.  இதுவரை அப்பெண்ணின் முகத்தை எவரும் பார்த்ததில்லையம். ஆனால் அப்பெண் மிகப்பெரிய அழகி என்றும் அதனால் தான் அவர் எவரிடதிலும் அப்பெண்ணை அறிமுகம் செய்யாமல் இருக்கிறார் என்று பலர் கூறுகிறார்கள்".


"அந்த மர்ம பெண்ணை இங்கு அழைத்து வந்துள்ளார். நமது  வேலை பெண் ஒருவர் எவருக்கும் தெரியாமல் அப்பெண்ணை பார்த்து வந்துள்ளார்" அதைப்பறறிதான் உள்ளே விவாதம் நடக்கிறது.

இதை கேட்ட வந்தியத்தேவன் "ஓ அப்பொது அந்த பல்லக்கில் வந்தது அவருடைய இளவரசியா" என்றான்.

கந்தமாறன், ஆச்சரியத்துடன் " நீ அப்பெண்ணை பார்த்தாயா" என்று கேட்டேன்.

ஆமாம்!.

"என்ன பார்த்தாயா! இது மட்டும் பழவேட்டயருக்கு தெரிந்தால் என்ன ஆகும் தெரியுமா! உன் தலையை துண்டாக சீவி விடுவார்". என்று பதட்டத்துடன் சொன்னான்.

"பதட்டப்படாதே காந்தமாரா! நான் ஒன்றும் எவருக்கும் தெரியாமல் சென்ற அப்பெண்ணை பார்க்கவில்லை".

"வின்னகரக் கோயிலில் நான் நின்றுகொண்டிருந்தபோது பழவேட்டையார் வீரர்கள் காவலில் யானையின் மீது வந்தார், அப்பொழுது அவரது பின்னால் பட்டுத் துணியால் மூடப்பட்ட ஒரு பல்லக்கு வந்தது. அந்த பல்லாக்கின் பட்டு துணியை செந்நிற கை ஒன்று விலக்கி ஒரு பெண்ணின் முகம் தென்பட்டது" நீ கூறுவதை வைத்து பார்த்தால் அந்த பெண் இவலாக தான் இருக்கும் என்றான்.

"ஆமாம் பழவேட்டயரை அழைத்து வந்த யானை, குதிரை, பரிவானங்கள் அனைத்தும் உங்கள் அரண்மனையை சேர்ந்தவையா?"

"ஆமாம் நண்பா! ஏன் கேட்கிறாய்?"

"இல்லை நண்பா! அவரது வரவேற்பையும் எனது வரவேற்பையும் ஒப்பிட்டு பார்த்தேன் அதான் கேட்டேன்" என்றான் சிரித்தவாறு.

"அவர் சோழ நாட்டுக்கு வரி வசுளிப்பவர் அவரது பதவிக்கு கொடுக்கப்பட்ட மரியாதை அது".

"ஆனால் நீயோ, சுத்த வீரான், ஆகையால் உனக்கு இத்தகைய வரவேற்பு கொடுத்தோம்" என நகைச்சுவையாக கூறினான்.

"வரும் காலத்தில் வேலவன் முருகப்பெருமானின் அருளில் நீ இந்த வீட்டுக்கு மருமகப் பிள்ளையானால் தக்கவாறு மாப்பிள்ளை வரவேற்பு அளிப்போம்".

அச்சமயத்தில் வாத்திய முழக்க சத்தம் கேட்க தொடங்கியது. அதை கேட்டவுடன் கந்தமாறன் " குரவைக் கூத்து நடக்க போகிறது! அதற்கு ஆரம்ப முழக்கம் இது!

" நண்பா நீ குரவைக் கூத்து காண விரும்புகிறாயா? அல்லது அறைக்கு சென்று ஓய்வெடுக்க விரும்புகிறாயா" என கேட்டான்.

அவன் குரவை கூத்து என கூறியதும் ஆழ்வார்க்கடியான் நம்பி குரவைக் கூத்து பற்றி கூறியது நினைவுக்கு வர.

" எனக்கும் குறவைக் கூத்து பார்க்க வேண்டும் எனும் ஆர்வம் உள்ளது நண்பா, நானும் வருகிறேன் சேர்ந்து சென்று பார்ப்போம்".

இருவரும் குராவைக் கூத்து நடைபெறும் இடத்தை அடைந்தனர்.

குரவைக் கூத்து நடைபெறும் மேடையில் கோழியை போலவும், மயிலைப் போலவும், அன்னத்தைப் போலவும் சித்திரஙகள் போட்டு அலங்கரிக்கப் பட்டிருந்தது. குத்துவிளக்கு மற்றும் தீ பந்தங்கள் இருளை விலக்கி ஒளியை கொடுத்தன.

மேடை முன் இசைக் கலைஞர்கள் அமர்ந்து வாத்தியங்கள் ஒளித்து  இசை  எழுப்பினர்.  முக்கிய விருந்தாளிகள் அனைவரும் மேடை முன் வந்து அமர்ந்ததும். குரவைக் கூத்து ஆடும் 9 பெண்கள் மேடைக்கு வந்தனர். சபையில் உள்ள அனைவருக்கும் வணக்கம் வைத்துவிட்டு முருகப் பெருமானின் புகழ் கூரும் பாடலை பாடினார். முருகனின் வீர பெருமையையும் பாடினார்கள். சூரபத்மன், கஜமுகன், முதலிய அசுர கணங்களைக் கொன்ற கந்தனின் பெருமைகளை பாடினர்.

முருகப்பெருமானை மணக்க பல தேவலோக பெண்கள் தவம் கிடைக்கையில். அவர் பூலோகம் வந்து காத்து நின்று மலைக்குறவர் மகளை மணந்து கொண்டதை புகழ்ந்து பாடினர், அவருடைய கருணையை குறித்தும் பாடினர்.

இறுதியாக "பசியும் பிணியும் பகையும் ஒழியும்" என கூறி கூத்தை நிறைவு செய்தனர்.

அதை தொடர்ந்து தேவராலன், தேவராட்டி எனும் ஆணும் பெண்ணும் வெலனாட்டம் ஆடுவதற்கு மேடை மேல் வந்தனர். அவர்கள் ரத்த நிற ஆடையை அணிந்திருந்தனர். செக்கச்சிவந்த செந்நிற செவ்வலரிப் பூமாலையை சூடி இருந்தனர். நெற்றியில் செந்நிற குங்குமத்தை அப்பிக் கொண்டிருந்தனர். அவர்கள் வாயும் வெற்றிலை பாக்கு போட்டிருந்ததால் இரத்த நிறத்தில் காணப்பட்டது. கண்களும் கோவைப்பழம் போல் சிவந்திருந்தன.

முதலில் சாந்தமாகவே ஆட்டத்தை தொடங்கினேன். தனித்தனியாகவும் பிறகு கைகோர்க்கும் ஆடிக்கொண்டிருந்தன. நேரமாக ஆக, ஆட்டத்தின் வெறி அதிகமானது. மேடையின் ஓரத்தில் இருந்த வேலை தேவராட்டி தன் கையில் எடுத்துக்கொண்டு வெறியாட்டம் ஆடத் துவங்கினாள். தேவராளன் அதை அவள் கையிலிருந்து பிடுங்க முயற்சி செய்தான். தேவராட்டி தன் பிடியை விடாது ஆடிக் கொண்டிருந்தாள். இறுதியில் தேவராளன் மேடை அதிரும்படி ஒரு குதி குதித்து ஒரு பெரிய தாண்டல் தாண்டி தேவராட்டி கையிலிருந்த வேலைப் பிடுங்கி கொண்டான். தேவராட்டி அந்த வேலை கண்டு அஞ்சிய பாவனையுடன் மேடையிலிருந்து கீழே இறங்கினாள். பிறகு தேவராளன் தனியே மேடையில் மேல் நின்று வெறியாட்டம் ஆடினான். சூரன் முதலிய அசுர கணங்கள் அனைத்தையும் அழிந்தன. வெட்டப்பட்ட சூரனின் தலை திரும்பத்திரும்ப முளைத்தன. முளைக்க முளைக்க வேலனின் உக்கிரம் அதிகமானது. அவனுடைய கண்ணிலிருந்து அக்கினி தீப்பொறி பறந்தது. கடைசியில் சூரபத்மன் இறந்து விழுந்தான். தேவராளன் தன் கையிலிருந்த வேலை கீழே போட்டான்.

அப்பொழுது இசை வாத்தியங்கள் அனைத்தும் நின்றன. உடுக்கையின் சப்தம் மட்டும் கேட்டது. அந்த சத்தத்தை கேட்டவுடன் தேவராளன் உடம்பில் ஒவ்வொரு அணுவும் பதறி ஆடியது. சிறிது நேரத்தில் தேவராளன் ஆவேசமாக ஆடத் துவங்கினார்.

ஆவேசமாக ஆடியவனை பார்த்து பூசாரி "வேலவா" , "கந்தா", "முருகா", "சூரசம்காரா" அடியார்களுக்கு அருள்வாக்கு சொல்ல வேண்டுமென வேண்டிக் கொண்டான்.

"கேளடா! சொல்லுகிறேன்! என்ன வேண்டுமோ, கேள்!" என்று சத்தமாக கூறினான்.

"மழை பெய்யுமா!, வெள்ளம் பெருகுமா! செல்வம் சேருமா! மக்கள் செழிப்புடன் வாழ்வார்கள்!" என்று கேட்டான் பூசாரி.

"மழை பெய்யும், வெள்ளம் பெருகும், செல்வம் சேரும், மக்கள் செழிப்புடன் வாழ்வார்கள்". ஆனால், என் அன்னைக்கு நீங்கள் பூசை போடவில்லை. பலி கேட்கிறாள்! பத்ரகாளி பலி கேட்கிறாள்! துர்க்கை பலி கேட்கிறாள்! மகிஷாசுரனை வதைத்த சண்டிகேஸ்வரி பலி கேட்கிறாள்!" என்று அலறியபடி கூறினான்.

பலியா! "என்ன பலி வேண்டும் தாயே!" என்று கேட்டான் பூசாரி.

"மன்னர் குலத்து ரத்தம் கேட்கிறாள்! ஆயிரங்கால அரச குலத்து ரத்தம் கேட்கிறாள்" என்று வெறியாட்டம் ஆடியபடி அலறினான். மேடையின் முன்னால் அமர்ந்திருந்த சம்புவரையர், பழவேட்டையர், மரவேட்டயர் அனைவரும் ஒருவருக்கொருவர் தங்கள் முகத்தை பார்த்துக்கொண்டிருந்தன. அவரது கண்கள் சைகையாக ஏதோ பேசினார்.

சம்புவரையர் பூசாரியை பார்த்து சைகை செய்தார். பூசாரி உடுக்கை சத்தத்தை நிறுத்தினார். வெறியாட்டம் ஆடிய தேவராளன் வேரில்லாத மரம் போல தரையில் விழுந்தான். மௌனமாக சபை கலைந்தது, தூரத்தில் நரி ஊளையிடும் சப்தம் கேட்டது. இத்தனை நேரம் கதையை கேட்டு பரபரப்புக்கு உள்ளாகி இருந்த வந்தியத்தேவன். நரிகள் ஊளையிடும் திசையை நோக்கி பார்த்தான். அங்கு தூரத்தில் ஒரு மதில் சுவர் மீது ஒரு தலை தென்பட்டது. அது ஆழ்வார்க்கடியான் தலைதான்! ஒரு கணம் வந்தியத்தேவன் ஒரு பயங்கர உணர்ச்சிக்கு உள்ளானார்.

ஆழ்வார்க்கடியான் தலையை தனியாக வெட்டி மதில் சுவர் மீது வைத்திருப்பது போல ஒரு பிரமை வந்தியத்தேவனுக்கு தோன்றியது. கண்ணிமைகளை மூடி திறந்து மறுபடியும் மதில்சுவரை நோக்கிப் பார்த்தான். அங்கு எவருடைய தலையும் தென்படவில்லை. அத்தகைய பிரம்மைக்கு உள்ளனதை எண்ணி வெட்க்கமடைந்தான். இதுவரை அனுபவிக்காத வேறு பல உணர்ச்சிகள் அவன் உள்ளத்தை கலங்கச் செய்தன.


நமது அடுத்த பதிவில் பொன்னியின் செல்வன் பாகம்-1 - புதுவெள்ளம் அத்தியாயம் 6 - நடுநிசிக் கூட்டம் பற்றி விரிவாக காண்போம் நன்றி.

Post a Comment

0 Comments